சேலத்தில் "ஸ்வச்ச ஹி சேவா" தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் காவிரி ஆற்றுப்பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றிய தென்னிந்திய ரயில்வே


இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி நாடெங்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்வச்சபாரத் தூய்மை இந்தியா நடவடிக்கைகளில் தற்போது நடைபெரும் 'ஸ்வச்ச ஹி சேவா' தூய்மையே சேவை நிகழ்வுகளின் நிறைவாக நேற்று (02.10.2017) காந்தி ஜெயந்தி தினத்தன்று தெற்கு ரயில்வே கோட்டம் சார்பில் அனைத்து ரயில் நிலையங்களிலும் காலை 10 மணி முதல் நடைபெற்றது.



தெற்கு ரயில்வே சார்பில் தூய்மை இந்தியா இயக்க திட்ட விழா செப்.15-ம் தேதி முதல் அக்.2-ம் தேதி வரையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தெற்கு ரயில்வேத்துறையினர் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஈரோடு அருகே உள்ள காவிரி ஆற்றங்கரையோர வங்கிகள், காவிரியோர ரயில்நிலையங்கள் மற்றும் குறிப்பிட்ட காவிரி ஆற்றுப்பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்றது. 



இதனிடையே, காவரி ஆற்றுப்படுகையில் தூய்மைப் பணியை சேலம் ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா தொடங்கி வைத்தார். இதில், சேலம் ரயில்வே ஊழியர்கள்,  கல்லூரி மாணவர்கள், ரோட்டரி சங்கம் மற்றும் இதர தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து 600-க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.



இதனை ஈரோடு மாவட்ட எம்.பி. எஸ். செல்வக்குமார சின்னையன் ஆய்வு செய்து, தூய்மைப்படுத்தும் பணிகுறித்து சேலம் ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மாவிடம் கேட்டறிந்தார். 

Newsletter

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...

மதுவிலக்கே தீர்வு; கள்ளுக்கு அனுமதி வேண்டும் - கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்

717 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் நடவடிக்கையை வரவேற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், மதுபழக்கத்தை க...

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...